×

சென்னை வாலிபர்கள் 2 பேரிடம் ₹2.22 லட்சம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி வேட்டவலம் அருகே

வேட்டவலம், மார்ச் 15: வேட்டவலம் அருகே ஆவணங்கள் இல்லாததால் சென்னை வாலிபர்கள் 2 பேரிடம் இருந்து ₹2.22 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த சாணிப்பூண்டி கூட்ரோட்டில், கீழ்பென்னாத்தூர் தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஜெயப்பிரகாஷ், எஸ்எஸ்ஐ முத்து உள்ளிட்ட குழுவினர் நேற்று அதிகாலை 5 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள டீக்கடையின் அருகே நின்றிருந்த 2 பேர் பணத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தனர். இதனை கவனித்த தேர்தல் பறக்கும் படையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த புருஷோத்தமன்(39), சென்னை திருவான்மியூர் காமராஜர் சாலையை சேர்ந்த தீனதயாளன்(38) என தெரியவந்தது.

அவர்களிடம் நடத்திய சோதனையில் புருஷோத்தமனிடம் ₹90 ஆயிரம், தீனதயாளனிடம் ₹1,32,500 என மொத்தம் ₹2,22,500 இருப்பது தெரியவந்தது. ஆனால், அதற்கான ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. இதனால் அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கீழ்பென்னாத்தூர் தாசில்தார் வைதேகியிடம் ஒப்படைத்தனர். மேலும், அந்த பணம் எதற்காக கொண்டு வரப்பட்டது? சென்னையை சேர்ந்தவர்கள் எதற்கு அங்கு வந்தார்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Tags : சென்னை ,Flying Squadron Action Hunt ,
× RELATED சென்னை அடையாறு திரு.வி.க. பாலத்தின்...